பயணிகளின் உயிர்களை ஊசலாடவிட்ட விமானிகள்?

ரஷ்யாவில் டிசம்பர் 28ஆம் தேதி அன்று பயணிகள் விமானம் ஒன்று தவறுதலாக உறைந்த ஆற்றில் தரையிறங்கியது.

30 பயணிகளை ஏற்றிச் சென்ற போலார் ஏர்லைன்ஸின் Antonov-24 விமானம் Zyryanka விமான நிலையத்தின் ஓடுபாதைக்கு வெளியே உள்ள கோலிமா ஆற்றில் பாதுகாப்பாக தரையிறங்கியது.

முதற்கட்ட விசாரணையில், இந்த விபத்துக்கு முழுக்க முழுக்க காரணம் விமானிகள் என்று தெரியவந்துள்ளது.அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.