விமானத்தில் நுழைய வளர்ப்பு நாய்க்கு அனுமதி மறுப்பு..!! பெண் செய்த அதிர்ச்சி செயல்…!!!

விமானத்தில் நுழைய வளர்ப்பு நாய்க்கு அனுமதி மறுப்பு..!! பெண் செய்த அதிர்ச்சி செயல்...!!!

அமெரிக்காவின் ஓர்லண்டோ சர்வதேச விமான நிலையத்தில் குப்பைப் பையில் இறந்து கிடந்த நாயின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

9 வயது மதிக்கத்தக்க வெள்ளை நிற miniature schnauzer நாயை விமானத்தில் எடுத்துச் செல்ல அந்தப் பெண்ணுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

பின்னர் அந்தப் பெண் நாயைக் கொன்று கழிப்பறையில் வீசியதாக நம்பப்படுகிறது.

விலங்குகளை கொடுமைப்படுத்திய குற்றச்சாட்டில் அந்தப் பெண் கைது செய்யப்பட்டு பின்னர் $5,000 ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

விமான நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் அந்தப் பெண் ஒரு அதிகாரியுடன் 15 நிமிடங்கள் பேசிக் கொண்டிருப்பது பதிவாகியுள்ளது.

அவள் நாயுடன் கழிப்பறைக்குள் நுழைந்து 20 நிமிடங்களுக்குப் பிறகு நாய் இல்லாமல் தனியாக வெளியே வந்தார்.

அவர் பாதுகாப்பு சோதனைகளை முடித்து விட்டு கொலம்பியாவிற்குச் செல்லும் விமானத்தில் ஏறினார்.

பின்னர் நடந்த விசாரணையில் உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

நாயை விமானத்தில் அழைத்துச் செல்ல போதுமான ஆவணங்கள் இல்லாததால் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.