பொன்னமராவதி அருகே வேந்தன்பட்டியில் போக்சோ வழக்கில் சம்பந்தப்பட்ட நபர் தூக்கிட்டு தற்கொலை!!

பொன்னமராவதி அருகே வேந்தன்பட்டியில் போக்சோ வழக்கில் சம்பந்தப்பட்ட நபர் தூக்கிட்டு தற்கொலை!!

பொன்னமராவதி அருகே வேந்தன்பட்டியில் போக்சோ வழக்கில் சம்பந்தப்பட்ட நபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே வேந்தன்பட்டி விஜயபுரம் ராஜா என்பவரின் மகன் விஜய்பாண்டி வயது 21. இவர் அதே ஊரை சேர்ந்த  17 வயது சரண்யா என்ற சிறுமியை 2023ம் வருடம் காதலித்து திருமணம் செய்து கொண்டதாகவும் இதனால் இவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இவருக்கு 4 மாதத்தில் ஒரு பெண் குழந்தை உள்ளது. கடந்த 25.05.23 ம் தேதி போக்சோ வழக்கிற்காக சிறைக்கு சென்றவர் 05.07.2023 ம் தேதி ஜாமினில் வெளிவந்து தற்போது வரை பொன்னமராவதி காவல் நிலையத்தில் கண்டிஷன் பெயிலில் கையொப்பமிட்டு வருகிறார். இந்நிலையில் மனைவியின் 1/2 பவன் தோட்டை அடகு வைத்ததாகவும், அதனை திருப்பித் தர முடியாததால்  மனைவி சரண்யாவிற்கும் மேற்படி இறந்த நபருக்கும் ஏற்பட்ட வாய் தகராறில் வீட்டின் தொட்டில் கம்பியில் வேஷ்டியை வைத்து 11.03.23 ம் தேதி மாலை 06.30 மணிக்கு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மேற்படி நபரின் பிரேதம் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.