விமானத்தில் மயங்கிய நபர் உயிரிழப்பு…!!!

விமானத்தில் மயங்கிய நபர் உயிரிழப்பு...!!!

Cathay Pacific விமானத்தில் திடீரென மயங்கி விழுந்த பயணி ஒருவர் உயிரிழந்த சம்பவம் விமானத்தில் பயணித்த மற்ற பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

டாக்காவில் இருந்து ஹாங்காங் நோக்கி விமானம் சென்று கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது.உயிரிழந்தவர் 47 வயதான பங்களாதேஷை சேர்ந்த ஆடவர் என்பது தெரியவந்துள்ளது.

புதன்கிழமை காலை 8 மணிக்குப் பிறகு பங்களாதேஷ் தலைநகரில் இருந்து வந்த சிஎக்ஸ் 662 விமானத்தில் பயணித்த அவர் உயிரிழந்ததாக ஹாங்காங் போலீசார் தெரிவித்தனர்.

விமானம் ஹாங்காங்கில் தரையிறங்கியதும் மயங்கி விழுந்தார்.அந்த நபர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அதிகாரிகள் அறிவித்தனர்.அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.ஆனால் அது பலனளிக்கவில்லை.

அவரது மரணத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.இறப்புக்கான காரணத்தை அறிய பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த மாதம் (செப்டம்பர் 2024) Cathay பசிபிக் விமானத்தில் நடந்த இரண்டாவது சம்பவம் இதுவாகும்.

இதற்கு முன் செப்டம்பர் 8ஆம் தேதி ஹாங்காங்கில் இருந்து மும்பைக்கு வந்த கேத்தே பசிபிக் விமானத்தில் ஜெர்மன் பயணி ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.