Pan-Island Expressway இல் லாரி மீது பைக் மோதி விபத்து!! சம்பவ இடத்திலேயே உயிரிழந்த பைக் ஓட்டுநர்!!

Pan-Island Expressway இல் லாரி மீது பைக் மோதி விபத்து!! சம்பவ இடத்திலேயே உயிரிழந்த பைக் ஓட்டுநர்!!

துவாஸ் நோக்கி பான்-ஐலண்ட் எக்ஸ்பிரஸ்வேயில் லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ஏற்பட்டது. இச்சம்பவத்தில் 35 வயதுடைய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து ஆகஸ்ட் 15-ஆம் தேதி மாலை சுமார் 4.55 மணியளவில் தகவல் கிடைத்ததாக காவல்துறை மற்றும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படை தெரிவித்தது.

மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதை SCDF துணை மருத்துவர் அறிவித்தார்.

மேலும் இந்த விபத்தால் அதிவேக நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இச்சம்பவம் தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.