உலககோப்பை தொடரில் பாகிஸ்தானின் தோல்விக்கு கண்ணீர் விட்டு அழுத பாகிஸ்தான் வீரர்!!

உலககோப்பை தொடரில் பாகிஸ்தானின் தோல்விக்கு கண்ணீர் விட்டு அழுத பாகிஸ்தான் வீரர்!!

நியூயார்க்கில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பையின் 16வது லீக் ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் நடைபெற்றது.

உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போட்டியில் இந்தியா 6 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி 3 போட்டிகள் கொண்ட தொடரை கைப்பற்றியது.

இதனால் இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தானின் தோல்வியால்
பாகிஸ்தான் வீரர் நசீம் ஷா மைதானத்தில் கண்ணீர் விட்டு அழுதார்.அதாவது வெற்றியை நெருங்கி வந்தாலும் வெற்றி பெற முடியவில்லையே என நினைத்து கண்ணீர் விட்டார்.சக பேட்ஸ்மேன் ஷகின் அப்ரிடி அவருக்கு ஆறுதல் கூறினார்.

அதேபோல் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மாவும் அவருக்கு ஆறுதல் கூறினார். மேலும் இது தொடர்பான வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதை கண்ட ரசிகர்கள் சிலர் இதுதான் இந்தியாவின் சகோதரத்துவம் என்று பதிவிட்டுள்ளனர்.