புறக்கணிப்பு குறித்து கொந்தளித்த பாகிஸ்தான்…!! விளக்கமளித்த ஐசிசி..!!!

புறக்கணிப்பு குறித்து கொந்தளித்த பாகிஸ்தான்...!! விளக்கமளித்த ஐசிசி..!!!

சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் மீண்டும் ஒரு பெரிய பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது. சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு பல்வேறு சர்ச்சைகளும் விவாதங்களும் எழுந்தன. இதை ஒன்றன் பின் ஒன்றாக ஐசிசி தீர்த்து வைத்தது.

இந்திய கிரிக்கெட் அணி பாதுகாப்பு மற்றும் அரசியல் காரணங்களால் பாகிஸ்தானுக்கு செல்லாமல் துபாயில் ஹைபிரிட் மாடலில் விளையாடுகிறது.இந்த சூழலில் இந்திய அணி அணிந்திருக்கும் ஜெர்சியில், போட்டியை நடத்தும் பாகிஸ்தானின் பெயர் சேர்க்கப்படாது என்று கூறியது முதலில் பிரச்சனையாக இருந்தது.

இதனால் பாகிஸ்தானின் எதிர்ப்பை ஏற்று இந்திய அணியின் ஜெர்சியில் பாகிஸ்தானின் பெயர் சேர்க்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் இந்திய தேசியக் கொடி புறக்கணிக்கப்பட்ட வீடியோ ஒன்று வைரலானது.இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. முதலில், போட்டி நடக்கும் இரு அணிகளின் கொடிகளை மட்டும் பொருத்த ஐசிசி அறிவுறுத்தியதாக பாகிஸ்தான் கூறியது.

இதற்கு இந்தியாவில் எதிர்ப்பு கிளம்பியதால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்தியாவின் கொடியை ஏற்றியது. இந்நிலையில், தற்போது மீண்டும் ஒரு சர்ச்சை வெடித்துள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் கூற்றுப்படி, இந்தியா விளையாடிய போட்டிகள் துபாயில் நடந்தாலும், ஒளிபரப்பின் போது ஐசிசி லோகோவின் கீழ் பாகிஸ்தான் என்ற பெயர் புறக்கணிக்கப்பட்டது.

துபாயில் போட்டிகள் நடத்தப்பட்டாலும், அதை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஏற்று நடத்தும் என்பதால் பாகிஸ்தானின் பெயர், டிவி
லோகோவில் இடம்பெற வேண்டும் என்று பாகிஸ்தான் ஐசிசி இடம் முறையிட்டது.தொழில்நுட்பக் கோளாறால் அதில் பாகிஸ்தான் பெயர் இடம்பெறவில்லை என ஐசிசி விளக்கமளித்துள்ள நிலையில், துபாயில் நடைபெறும் அடுத்த போட்டியில் பாகிஸ்தானின் பெயர் டிவி லோகோவில் இடம்பெறும் என்று உறுதியளித்தது.