சாம்பியன்ஸ் டிராபி தொடரிலிருந்து வெளியேறும் பாகிஸ்தான்..!!இந்தியா அசத்தல் வெற்றி…!!!

சாம்பியன்ஸ் டிராபி தொடரிலிருந்து வெளியேறும் பாகிஸ்தான்..!!இந்தியா அசத்தல் வெற்றி...!!!

துபாயில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரின் நேற்றைய ஆட்டத்தில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், முகமது ரிஸ்வான் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் மோதின.

துபாய் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நேற்று பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங்கை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் இந்திய அணிக்கு 242 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.ஆரம்பத்திலேயே போராடிய பாகிஸ்தான், பின்னர் நிலைபெற்றது.இறுதியில் விக்கெட்டுகள் விழ ஆரம்பித்தன. இறுதியில் 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 241 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக சவுத் ஷகீல் 62 ரன்கள் எடுத்தார். இந்திய தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இந்தியா அபார வெற்றி…

அதன் பின் களமிறங்கிய இந்திய அணி 242 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி 42.3 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 244 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.இதன் மூலம் இந்திய அணி பாகிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.


இந்த வெற்றியின் மூலம் இந்தியா அரையிறுதிக்கு முன்னேறுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

நேற்றைய ஆட்டத்தில் ஷ்ரேயாஸ் ஐயர் 56 ரன்களும், சுப்மன் கில் 46 ரன்களும் எடுத்தனர்.ரோகித் சர்மா 20 ரன்களும், ஹர்திக் பாண்டியா 8 ரன்களும் எடுத்தனர்.

இந்திய அணி சார்பில் 3ஆவது விக்கெட்டுக்கு கோலி களமிறங்கினார்.முதலில் சுப்மன் கில்லுடன் ஜோடி சேர்ந்து அபாரமாக விளையாடினார். பின்னர் கில் அவுட்டாகி வெளியேறவே, ஸ்ரேயஸ் அய்யருடன் ஜோடி சேர்ந்தார். கடைசிவரை களத்தில் நின்ற கோலி, 111 பந்துகளில் 100 ரன்கள் விளாசி அணியின் வெற்றி பாதைக்கு வழி வகுத்தார்.

வெளியேறும் பாகிஸ்தான்…

இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. கடந்த 19ம் தேதி பாகிஸ்தான் நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 60 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.27ம் தேதி வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டம் மட்டும் எஞ்சியுள்ளது.அதில் வெற்றி பெற்றாலும் அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியாது. இதன்மூலம் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து வெளியேறிய முதல் அணியாக பாகிஸ்தான் உள்ளது.இது அந்நாட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Follow us on : click here 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan