ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் பரவிய காட்டுத் தீயில் சிக்கி ஒருவர் பலி...!!!

ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் பரவி வரும் காட்டுத் தீயில் சிக்கி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
அப்பகுதியில் ஒரே வாரத்தில் மூன்றாவது முறையாக காட்டுத் தீ பரவியுள்ளது.
இவாட்டே பகுதியில் சுமார் 600 ஹெக்டேர் நிலம் அழிக்கப்பட்டது.
காட்டுத் தீயினால் 80க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் சேதமடைந்தன.
எனவே பகுதியில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.
குடியிருப்பு பகுதிகளில் பரவிய தீயை அணைக்கும் பணி தொடர்கிறது.
காட்டுத் தீ மிகப் பெரிய அளவில் பரவியுள்ளதாக மேயர் தெரிவித்துள்ளார்.
தீ ஏற்பட்டதற்கான காரணம் தெரியவில்லை.
அப்பகுதியில் வசிக்கும் சுமார் 500 வீடுகள் மின்சாரம் இன்றி தவிக்கின்றனர்.
மீட்புப் பணிகளுக்கு உதவ ஹெலிகாப்டர்கள் அனுப்பப்பட்டுள்ளன.
மக்களுக்கு உதவுவதற்காக அருகில் உள்ள 6 பகுதிகளில் இருந்து அவசரகால பணியாளர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilansg