Latest Singapore News

சிங்கப்பூரில் பேருந்து மோதி ஒருவர் மரணம்!

ஏப்ரல் 10-ஆம் தேதி திங்கட்கிழமை அன்று பாசிர் ரிஸில் 65 வயதுடைய சைக்கிளோட்டியைப் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் சைக்கிளோட்டி உயிரிழந்து விட்டார். உயிரிழந்தவர் துப்புரவு பணியாளர் என்பது தெரியவந்துள்ளது. அவர் வேலைக்கு சைக்கிள் மூலம் சென்றுக் கொண்டிருக்கும்பொழுது இந்த விபத்து நேர்ந்தது.

இந்த விபத்து பாசிர் ரிஸ் டிரைவ் 3 மற்றும் பாசிர் ரிஸ் சென்ட்ரல் சந்திப்பில் நேர்ந்தது.

இதில் சைக்கிளோட்டிக்கு கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது.அவரை மீட்டு உடனடியாக சாங்கி பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கடுமையான காயங்கள் ஏற்பட்டதனால் அவர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

அவர் காயம் காரணமாக உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.

ஏப்ரல் 10-ஆம் தேதி காலை 7.20 மணியளவில் காவல்துறைக்கு விபத்துக் குறித்து தகவல் கிடைத்ததாக கூறியது.

45 வயதுடைய பேருந்து ஓட்டுநர் இந்த விபத்து குறித்த விசாரணையில் உதவி வருகிறார்.

அனைவரும் சைக்கிள் ஓட்டும் பொழுதும், வாகனத்தில் செல்லும் பொழுதும், கவனமாகவும் நிதானமாகவும் சிங்கப்பூரின் விதிமுறைகளைப் பின்பற்றியும் செல்லுங்கள்.