சுவா சூ காங் கிரசண்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழப்பு….!!!

சுவா சூ காங் கிரசண்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழப்பு....!!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் சுவா சூ கிரசண்டில் உள்ள புளோக் 692A வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

இன்று அதிகாலை 5.30 மணியளவில் தீயணைப்பு படை அதிகாரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்த தகவலை சிங்கப்பூர் குடியுரிமை தற்காப்பு படை தெரிவித்தது.

புளோக்கின் 9வது மாடியில் உள்ள வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது.

வீட்டின் அறையில் ஒரு நபர் கண்டுபிடிக்கப்பட்டார்.

அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தும் கருகி நாசம் அடைந்தன.

தீயணைப்பு வீரர்கள் நீர்ஜெட் பம்புகளை பயன்படுத்தி தீயினை அணைத்தனர்.

அவருடன் வீட்டில் வேறு யாரும் இல்லை.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குடியிருப்பில் இருந்த 150 பேர் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.