லிட்டில் இந்தியா பகுதியில் நடந்த கைகலப்பில் ஒருவர் மரணம்…!!!

லிட்டில் இந்தியா பகுதியில் நடந்த கைகலப்பில் ஒருவர் மரணம்...!!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் லிட்டில் இந்தியா பகுதியில் நடந்த கடும் சண்டையில் ஒருவர் உயிரிழந்தார்.

இன்று (செப்டம்பர் 22) அதிகாலை 4 மணியளவில் எண் 16 வார்டன் சாலையில் உள்ள காபி கடையில் இருந்து உதவிக்கு அழைப்பு வந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.

இந்தச் சம்பவத்தில் 24 மற்றும் 25 வயதுடைய இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

25 வயதுடைய ஒருவரே பின்னர் உயிரிழந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

சம்பவ இடத்தில் இருந்து காலணிகள் கைப்பற்றப்பட்டன.

சீன ஊடகமான 8 வேர்ல்ட் செய்தி நாளிதழ் எங்கும் இரத்தக் கரைகள் இருப்பதாக கூறியது.

அந்தக் காபி கடை தற்போது மூடப்பட்டுள்ளது.

Follow us on : click here ⬇️