சிங்கப்பூர் கடற்பரப்பில் இழுவை படகு மூழ்கியதில் ஒருவர் மரணம்…!!!

சிங்கப்பூர் கடற்பரப்பில் இழுவை படகு மூழ்கியதில் ஒருவர் மரணம்...!!!

சிங்கப்பூர்:சிங்கப்பூர் கடற்பரப்பில் இழுவை படகு மூழ்கியதில் ஒருவர் உயிரிழந்தார்.

படகில் இருந்து மேலும் ஒருவரை தேடும் பணி தொடர்வதாக கடல் துறை மற்றும் துறைமுக ஆணையம் தெரிவித்துள்ளது.

கடலோர காவல்படை மற்றும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையுடன் இணைந்து செயல்படுவதாக அது கூறியது.

OSHIO என்ற இழுவை படகு செப்டம்பர் 4 பிற்பகல் 2.15 மணியளவில் கிழக்கு ஏங்கரேஜ் பகுதியில் மூழ்கியது.

கிழக்கு ஏங்கரேஜ் மெரினா பேரேஜ்க்கு வெளியே உள்ள நீரில் அமைந்துள்ளது.

இழுவை படகில் இரண்டு பேர் பயணித்துள்ளனர்.

இழுவைப்படகு குழு உறுப்பினர்கள் இருவரும் இந்தோனேசியர்கள் என்று தெரியவந்துள்ளது.

அவர்களில் 39 வயதுடைய நபர் அதிகாரிகளால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் அவர் உயிரிழந்ததாக ஆணையம் தெரிவித்துள்ளது.

படகில் எண்ணெய் மாசுபாடு எதுவும் பதிவாகவில்லை.

மூழ்கிய படகை மீட்க நீர்மூழ்கிக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

அப்பகுதியில் உள்ள படகுகள் மற்றும் கப்பல்கள் விலகி இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

 

Follow us on : click here ⬇️