கடலில் எண்ணெய் கசிவு!! மீன் பண்ணைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா?

கடலில் எண்ணெய் கசிவு!! மீன் பண்ணைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா?

சிங்கப்பூரில் உள்ள பாசிர் பாஞ்சாங் துறைமுகத்திற்கு அருகே ஜூன் 14-ஆம் தேதி கனரக கப்பல் ஒன்று நகராமல் நின்று கொண்டிருந்த மோதியதில் அதில் இருந்த எண்ணெய் கடலில் கசிந்தது.

ஜொகூர் நீரிணையில் உள்ள சிங்கப்பூர் மீன் பண்ணைகள் எண்ணெய் கசிவால் பாதிக்கப்படவில்லை என்று சிங்கப்பூர் உணவு அமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும் மீன்கள் தொடர்ந்து உண்பதற்கு பாதுகாப்பாக இருப்பதாக கூறியது.

இந்த தகவலை அமைப்பு தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

ஜொகூர் நீரிணை வரை எண்ணெய் கசிவு பரவுவதற்கான வாய்ப்பு குறைவு என்று தெரிவித்துள்ளது.

மீன் பண்ணைகளுடன் அமைப்பு தொடர்பில் இருப்பதாக கூறியது. மேலும் இந்த சூழ்நிலையை உன்னிப்பாக கண்காணித்து வருவதாக தெரிவித்தது.