தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்திய அதிகாரி!!

வியட்நாமில் அதிகார துஷ்பிரயோகம் செய்த குற்றத்திற்காக 59 வயதான Nguyen Thanh Binh என்பவரை டிசம்பர் 25ஆம் தேதி அன்று காவல்துறை கைது செய்தனர்.

அவர் 2019 ஆம் ஆண்டு மே மாதம் முதல் மீகாங் டெல்டாவில் உள்ள An Giang மாகாணத்தில் மக்கள் குழுவின் தலைவராக பதவி வகித்து வருகிறார்.

அவர் பணத்திற்காக, Trung Hau 68 நிறுவனம் அதிக அளவில் மணலை சுரண்டுவதற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டது.

அந்த நிறுவனம் உரிமம் பெற்ற அளவைவிட அதிக அளவில் மணலை தோண்டி எடுத்ததாக அதிகாரிகள் கூறினர்.அவர் கைது செய்யப்பட்டார்.மணல் கொள்ளையால் சுற்றுச்சூழல் அதிகம் பாதிக்கப்படுவதாக அவர்கள் தெரிவித்தனர்.