Novavax தடுப்பூசியை தயாரிக்கும் நிறுவனம் தனது விநியோகத்தை நிறுத்தி விட்டதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதனால் 2024-ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் சிங்கப்பூர் தேசிய தடுப்பூசி திட்டத்தின்கீழ் Novavax Covid-19 தடுப்பூசி கிடைக்காது.அது வழங்கப்படாது என்று சுகாதார அமைச்சகம் தகவலை வெளியிட்டது.
அடுத்த மாதம் டிசம்பர் 31-ஆம் தேதியுடன் சிங்கப்பூரில் கையிருப்பில் உள்ள மருந்துகள் காலாவதியாகிறது.
அடுத்த மாதம் 1-ஆம் தேதிக்குள் Novavax தடுப்பூசி தேவைப்படுவோர் போட்டு கொள்ளுமாறு கூறப்பட்டுள்ளது.
அந்த வகையில் அடுத்த மாத இறுதிக்குள் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் மூலம் தடுப்பூசி தொடரை அவர்கள் முடித்துக் கொள்ள முடியும் .