அகில இந்திய வேலை நிறுத்தம் போராட்டம் அறிவிப்பு!!

அகில இந்திய வேலை நிறுத்தம் போராட்டம் அறிவிப்பு!!

பொன்னமராவதி, பிப்.14-
பொன்னமராவதியில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் வட்டார கிளை சார்பில் பிப்ரவரி 16ஆம் தேதி  நடைபெறும்  அகில இந்திய வேலை நிறுத்தம் மறியல் போராட்ட ஆயத்த கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வட்டார தலைவர்  தமிழ்ச்செல்வி தலைமை வகித்தார்.நிர்வாகிகள் சகுந்தலா, , சரஸ்வதி, மலர்,பாண்டிச்செல்வி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட துணை தலைவர் சந்திரா பங்கேற்று கோரிக்கைகள் குறித்து சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் வருகிற 16-ம் தேதி புதுக்கோட்டையில் நடைபெறும் அகில இந்திய வேலை நிறுத்த மறியல் போராட்டத்தில் வட்டாரத்தில் உள்ள அங்கன்வாடி ஊழியர்கள் அனைவரும் பங்கேற்பதென முடிவு செய்யப்பட்டது.