சிங்கப்பூரில் முதியோர்களுக்கான புதிய அம்சம்!!

சிங்கப்பூரில் முதியோர்களுக்கான புதிய அம்சம்!!

முதியவர்கள் நலனில் அக்கறை காட்டும் சிங்கப்பூர்….
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் புக்கிட் பாத்தோக்கில் வசிக்கும் மூத்த குடிமக்கள் அவர்கள் வசிக்கும் பகுதியிலேயே தனிப்பட்ட சிகிச்சையைப் பெரும் வசதியை ஏற்பாடு செய்திருக்கிறது.

தனியாக எதிர்கொள்ள கடினமாக இருக்கும் பிரச்சினைகளுக்கு மக்கள் இந்த சிகிச்சை முறையினை நாடலாம். தனிப்பட்ட சிகிச்சையானது உளவியல் சிகிச்சை, பேச்சு சிகிச்சை மற்றும் ஆலோசனை என்றும் அழைக்கப்படுகிறது.

மேலும் முதியவர்கள் அத்தகைய சிகிச்சைக்காக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை.

செயின்ட் லூக்ஸ் முதியவர்கள் பராமரிப்பு வளாகத்தில் உள்ள புதிய வசதியானது இயந்திர உபகரணங்கள் மற்றும் வீடியோ கேம்கள் மூலமாக மருத்துவ சிகிச்சையை வழங்குகிறது.

இந்த மையம், அதே செயல்பாடுகளை மீண்டும் மீண்டும் செய்வதை விட, புதிய மற்றும் புத்துணர்ச்சியூட்டும் செயல்களால் முதியவர்களை உற்சாகப்படுத்த முயல்கிறது.

மருத்துவமனையில் இத்தகைய சிகிச்சைகளைப் பெறுவதற்கு நோயாளிகள் கிட்டத்தட்ட 2 வாரங்கள் வரை காத்திருக்க வேண்டியிருக்கும்.

ஆனால் புக்கிட் பாத்தோக் நிலையத்தில் முதியவர்கள் வாரம் ஒருமுறை சிகிச்சை பெற வாய்ப்பு கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்படுகிறது.