சிங்கப்பூரில் அடுத்த வருடம் வரவுள்ள புதிய மாற்றம்!!

சிங்கப்பூரில் 2024, ஜனவரி 1ஆம் தேதி முதல் அஞ்சல் கட்டணங்கள் 5 சென்ட்கள் உயர்த்தப்படும் என்று சிங்கப்பூர் போஸ்ட் அறிவித்துள்ளது. இந்த தகவலை டிசம்பர் 7ஆம் தேதி (நேற்று) தெரிவித்தது.

இந்த அறிவிப்புக்குப் பிறகு சிங்போஸ்ட்டின் பங்குகள் உயர்ந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

அஞ்சல் கட்டணங்களுக்கான எடை வரம்பு இரண்டு கிலோ என்று தெரிவித்தனர்.

மலேசியா மற்றும் Brunei நாடுகளுக்கு அனுப்பப்படும் ஏரோகிராம்களுக்கான கட்டணத்தில் எந்த மாறுபாடும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் யுனிவர்சல் போஸ்டல் யூனியனால் இந்த கட்டண திருத்தங்கள் செய்யப்படுகின்றன.

இந்த கட்டணங்கள் அஞ்சல் அனுப்பப்படும் நாடுகளில் உள்ள அஞ்சல் நிறுவனங்களுக்கு செலுத்தப்படுகிறது என்று தெரிவித்தது.