சிங்கப்பூரில் முதியோர்களுக்காக புதிய பராமரிப்பு நிலையங்கள்!!

சிங்கப்பூர்:மக்கள் உழைக்கும் கட்சியின் சமூக தொண்டு நிறுவனமான PCF இன் நிர்வாகத்தின் கீழ் மூன்று புதிய முதியோர் பராமரிப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளனஅவை அடுத்த ஆண்டு (2025) ஜூரோங் மற்றும் சீமெய்யில் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூத்த குடிமக்கள் சமூகத்தில் முன்னேற இந்த நிலையங்கள் உதவும்.

இந்த நிலையங்கள் அவர்களை துடிப்புடன் வைத்திருக்கவும், ஆக்கபூர்வமாகவும் வைத்திருக்கவும் உதவும்.

பராமரிப்பு மையங்கள் மூத்த குடிமக்களை சமூக தொடர்பு மற்றும் சமூக ஈடுபாட்டை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட பொழுதுபோக்கு மையங்களாக செயல்படுகின்றன.

ஜூரோங் வெஸ்டில் உள்ள பராமரிப்பு மையத்தின் வசதியானது சுமார் 3,000 முதல் 4,000 மூத்த குடிமக்களுக்கு சேவை செய்யும் வகையில் அமைய உள்ளது.

வயதானவர்களுக்கு சேவை செய்யும் இப்பராமரிப்பு மையங்கள்,எல்லா வகையான வசதிகளும் கூடிய மையங்களாக திகழும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அரசாங்கத்தின் தேசிய மக்கள்தொகை மற்றும் திறனாய்வு பிரிவு சிங்கப்பூரர்களில் 2010ல் 10ல் ஒருவராக இருந்த 65 அல்லது அதற்கு மேற்பட்ட வயதானவர்கள் 2030க்குள் நான்கில் ஒருவராக இருப்பார்கள் என்று கணித்துள்ளது.

PCF இன் வருடாந்த நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் லாரன்ஸ் வோங், மாறிவரும் சமூகத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு சமூகப் பிணைப்பு முக்கியமானது என்று குறிப்பிட்டார்.