மலேசியாவில் ஏற்ப்பட்ட இயற்க்கை சீற்றம்!!

மலேசியாவில் ஏற்ப்பட்ட இயற்க்கை சீற்றம்!!

மலேசியாவின் கேமரான் மலைப்பகுதியில் ஜனவரி 26 ஆம் தேதி அன்று அதிகாலை நிலச்சரிவு ஏற்பட்டது.

இந்த நிலச்சரிவில் சிக்கி இரண்டு பேர் உயிரிழந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் மூன்று பேர் உயிருடன் புதைக்கப்பட்டிருக்கலாம் என அவர்கள் அஞ்சுகின்றனர்.

இந்த ஐந்து பேரும் மியான்மர் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் குறித்து அதிகாலை 2.50 மணியளவில் தீயணைப்பு மற்றும் மீட்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இப்பகுதியில் கடந்த சில நாட்களாக பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.