சிங்கப்பூரில் களைகட்டவிருக்கும் தேசிய தின கொண்டாட்டங்கள்!!

சிங்கப்பூரில் களைகட்டவிருக்கும் தேசிய தின கொண்டாட்டங்கள்!!

சிங்கப்பூரில் களைகட்டவிருக்கும் தேசிய தின கொண்டாட்டங்கள்..

சிங்கப்பூர்: சிங்கப்பூர் தேசிய தின அணிவகுப்பு 2024 பல்வேறு புதிய அம்சங்களுடன் களை கட்டவிருக்கிறது.

தேசிய தின கொண்டாட்டங்கள் பத்து ஆண்டுகளுக்கு பிறகு இந்த வருடம் ப்ரோமன்டோரி @ மரினா பே உள்ளிட்ட பகுதிகளை அலங்கரிக்கின்றன.

ஆகஸ்ட் 3ஆம் தேதி நடக்கும் முன்னோட்ட நிகழ்விலும், தேசிய தினத்தில் நடைபெறும் கொண்டாட்ட நிகழ்விலும் 10,000க்கும் மேற்பட்டோர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் தேசிய தினத்தில் நேரடி நிகழ்ச்சிகள்,வான்-கடல் சாகசங்கள் என பல நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை கவர காத்திருக்கின்றன.

தேசிய தொழிற்சங்க காங்கிரஸும் தேசிய தின அணிவகுப்பு ஏற்பாட்டுக் குழுவும் ஒன்றாக இணைந்து செயல்படுகின்றன.

மக்கள் NTUC பே கொண்டாட்டத்திற்கான இலவச டிக்கெட்டுகளை ஜூன் 24 முதல் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஜூலை 8 என அறிவிக்கப்பட்டுள்ளது.