மியான்மரில் சுகாதார பராமரிப்பு கட்டிடத்தின் அபாய நிலை…!!!

மியான்மரில் சுகாதார பராமரிப்பு கட்டிடத்தின் அபாய நிலை...!!!

மியான்மரின் ஏற்கனவே பலவீனமான சுகாதாரப் பராமரிப்புக்கூடம் முற்றிலுமாக
செயலிழக்க வாய்ப்பிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.

நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பை சமாளிக்க மருத்துவமனைகள் சிரமப்படுவதாக அது கூறியது.

மருந்துகள் மற்றும் மருத்துவப் பொருட்களுக்கு கடுமையான பற்றாக்குறை இருப்பதாகவும் ஐ.நா. நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் மியான்மரை தாக்கிய 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் 17 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டனர்.

மியான்மர் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,500ஐத் தாண்டியுள்ளது.

அந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று ஐ.நா. நிறுவனம் கூறுகிறது.

இந்த நூற்றாண்டில் மியான்மரைத் தாக்கிய மிக சக்திவாய்ந்த பூகம்பங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது.

மியான்மர் பல ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நீடிக்கும் நிலையில் அது நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது.

அங்கு 80 சதவீதத்திற்கும் அதிகமான கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன.

மக்கள் இருக்க இடமின்றி தவித்து வருகின்றனர். பலர் உணவு மற்றும் உடையில்லாமலும் மின்சாரம் இன்றியும் சிரமப்படுகின்றனர்.

இந்நிலையில் சீனா மியான்மருக்கு கூடுதல் மனிதாபிமான உதவிகளை அனுப்புவதாகக் கூறியுள்ளது.