சிங்கப்பூர் சட்ட, போக்குவரத்து துணையமைச்சராக பதவியேற்றுள்ள முரளி பிள்ளை!!

சிங்கப்பூர் சட்ட, போக்குவரத்து துணையமைச்சராக பதவியேற்றுள்ள முரளி பிள்ளை!!

சிங்கப்பூர் சட்ட,போக்குவரத்து துணையமைச்சராக புக்கிட் பாத்தோக் தனித்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. முரளி பிள்ளை இன்று(ஜூலை 1) பதவியேற்றுள்ளார்.

அதனை தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அவர் இதற்கு முன் உள்துறை, சட்டம் போன்றவற்றுக்கான அரசாங்க நாடாளுமன்றக் குழு தலைவர் பொறுப்பை வகித்து வந்தார்.

சுவா சூ காங் குழுத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் Zhulkarnain Abdul Rahim இனி அந்த பதவியை ஏற்பார். இதனை மக்கள் செயல் கட்சி தெரிவித்துள்ளது.

இன்று நான் சட்ட, போக்குவரத்து துணையமைச்சராக பதவியேற்றுள்ளேன். வழக்கம் போல் நான் புக்கிட் பாத்தோக் வட்டாரத்துக்கு வந்துள்ளேன். பல குடியிருப்பாளர்களை கண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன்’ என்று அவர் பதிவில் கூறியுள்ளார்.