சிங்கப்பூரில் பல வாகனங்கள் மோதி விபத்து!! மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நால்வர்!!

சிங்கப்பூரில் பல வாகனங்கள் மோதி விபத்து!! மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நால்வர்!!

சிங்கப்பூரில் தீவு விரைவுச் சாலைக்கு (PIE) செல்லும் வழியில் தெம்பனீஸ் விரைவுச்சாலையில் பல வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானது.

5 கார்கள் மற்றும் ஒரு பைக் சேதமடைந்தன.

மருத்துவமனைக்கு 4 பேர் கொண்டு செல்லப்பட்டனர்.

இச்சம்பவம் மே 18-ஆம் தேதி(நேற்று) விபத்து நேர்ந்தது.

மதியம் சுமார் 1.40 மணியளவில் இச்சம்பவம் குறித்து காவல்துறைக்கு அழைப்பு வந்ததாக 8 World செய்தித்தளம் வெளியிட்டுள்ளது.

செங்காங் பொது மருத்துவமனைக்கு 29 வயதுடைய பைக் டிரைவர், பைக்கில் பின்னால் அமர்ந்திருந்த 28 வயதுடைய நபர் மற்றும் இரண்டு கார் டிரைவர்கள் உட்பட நான்கு பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர் என்று சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படை கூறியது.

இச்சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.