பிலிப்பைன்சில் 20 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!!காரணம் என்ன?

பிலிப்பைன்சில் 20 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!!காரணம் என்ன?

தெற்கு பிலிப்பைன்சில் ஜனவரி 28ஆம் தேதி முதல் பிப்ரவரி 2ஆம் தேதி வரை மழை பெய்தது.

இதன் விளைவாக நாட்டின் பல பகுதிகளில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது.

இதன் காரணமாக குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் இரண்டு பேரைக் காணவில்லை என்று அவர்கள் கூறினர்.

வடகிழக்குப் பருவமழை காரணமாக 812,000க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சுமார் 85,000 பேர் தற்காலிக தங்குமிடங்களில் தஞ்சம் புகுந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.