Latest Singapore News in Tamil

காணாமல் போன ரியல் எஸ்டேட் புரோக்கர்….. துண்டு துண்டாக வெட்டப்பட்ட உடல்…..

ஒரு வாரமாக காணாமல் போயிருந்த ஜெர்மன் தொழிலதிபர் Hans-Peter Mack (62) என்பவரின் சடலம் தாய்லாந்தில் உள்ள வாடகை வீட்டில் உள்ள குளிர்சாதன பெட்டியில் அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது. அவரது உடல் துண்டாக்கப்பட்டு அடைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

திங்கட்கிழமை இரவு 11 மணியளவில் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.

குப்பைப் பைகளில் வைக்கப்பட்டு, வெள்ளை உறைவிப்பான் பெட்டியில் துண்டு துண்டாக வெட்டப்பட்டுள்ளது.காணாமல் போன ஹான்ஸ் பீட்டர் மேக் உடல் என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

கண்காணிப்பு வீடியோவில் ஒரு கருப்பு பிக்கப் டிரக்கின் பின்புறத்தில் ஏற்றப்பட்ட அதே பெட்டியில், அதன் அருகில் ஒரு மனிதன் அமர்ந்து இருப்பது பதிவாகி இருந்தது.

தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தில் இருந்து கம்பியில்லா செயின்சா, ஹெட்ஜ் கிளிப்பர்கள் மற்றும் இரண்டு பிளாஸ்டிக் ரோல்களையும் மீட்டனர்.

அவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்ட இடம் German நண்பர் ஒருவரால் வாடகைக்கு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அவர் காணாமல் போனதை அடுத்து அவரைப் பற்றிய தகவல்களை அளிப்பவர்களுக்கு மேக்கின் குடும்பம் 3 மில்லியன் வெகுமதி அளிக்கப்பட்டது.காணாமல் போனோர் சுவரொட்டியில் பட்டியலிடப்பட்ட தொலைபேசி எண் செவ்வாய்கிழமை பதிலளிக்கப்படவில்லை.

மேக்கின் வங்கிக் கணக்கில் இருந்து பெருமளவிலான பணம் காணாமல் போனதை காவல்துறை தெரிவித்தனர். இது குற்றத்துடன் தொடர்புடையதாக அவர்கள் நம்புகிறார்கள். அவர்கள் ஜெர்மன் மற்றும் தாய்லாந்து நாட்டவர்களாக இருக்கலாம் என்று பல சந்தேக நபர்களை விசாரித்து வருகின்றனர்.

மேக் தனது மெர்சிடிஸ் செடானை கடலோர நகரமான பட்டாயாவில் ஓட்டிக் கொண்டிருந்தார். அவர் தாய்லாந்தின் பட்டாயாவில் தனது 24 வயது தாய்லாந்து மனைவியுடன் பல ஆண்டுகளாக வசித்து வந்தார். ரியல் எஸ்டேட் புரோக்கராக வேலை பார்த்து வந்தார்.

நோங் ப்ரூவில் உள்ள காண்டோமினியம் ஒன்றின் வாகன நிறுத்துமிடத்தில் ஞாயிற்றுக்கிழமை இந்த வாகனம் கண்டுபிடிக்கப்பட்டது. புலனாய்வாளர்கள் வாகனத்தில் உள்ள இருக்கைகள், டாஷ்போர்டு மற்றும் ஸ்டீயரிங் உட்பட, துப்புரவு கரைப்பான் தடயங்களை கண்டுபிடித்தனர். அவை ஆதாரங்களை அழிக்கும் முயற்சியில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.

இந்த கொடூரமான கொலைக்கான காரணம் மர்மமாகவே உள்ளது. இது வணிகம் தொடர்பானது என்று தாய்லாந்து போலீசார் நம்புகிறார்கள்.

பாங்கில் உள்ள ஜெர்மன் தூதரகம் அதன் தொலைபேசிக்கு பதில் அளிக்கவில்லை.இந்த சம்பவம் குறித்து கருத்து கேட்கும் மின்னஞ்சல் கேள்விக்கும் பதில் தரவில்லை.