ரயில் தண்டவாளத்தில் விழுந்த பெண், இரண்டு குழந்தைகள் அதிர்ஷ்டவசமாக உயிருடன் தப்பித்த அதிசயம்!!

இந்தியாவின் கிழக்கு மாநிலமான பீகாரில் ரயில் தண்டவாளத்தில் விழுந்த பெண்ணும் அவரது இரண்டு குழந்தைகளும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.இச்சம்பவம் டிசம்பர் 23ஆம் தேதி அன்று நடந்ததாக தெரிவிக்கப்பட்டது.

அந்தப் பெண்ணின் கணவர் உட்பட, நான்கு பேரும் பீகாரின் பாகல்பூர் நகரில் இருந்து புதுடெல்லிக்கு செல்லும் ரயிலில் ஏறிக் கொண்டு இருந்தனர்.

அப்போது ஏராளமான பயணிகள் ரயிலில் ஏற முயன்ற போது எதிர்பாராத விதமாக அந்த மூவரும் தண்டவாளத்தில் விழுந்தனர்.விரைவு ரயில் நகர்ந்து சென்றபோது அந்த பெண் தனது பிள்ளைகளை அணைத்துக் கொண்டார்.

மூவரும் ஒரு கீறல் கூட இல்லாமல் உயிர் தப்பினர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.மேலும் இதனை அறிந்த அந்தப் பெண்ணின் கணவர் ரயிலில் இருந்து குதித்து அவர்களை பார்க்க மீண்டும் ரயில் நிலையத்திற்கு ஓடியதாக அவர்கள் கூறினர்.

ரயில் நிலையத்தில் இருந்த மற்ற பயணிகள் அந்த மூவரையும் காப்பாற்றினர்.மூவரும் மருத்துவமனையில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.அவர்களின் உடல்நிலை சீராக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.