பொன்னமராவதி அருகே வார்ப்பட்டு கிராமத்தில் மகா சிவராத்திரியை முன்னிட்டு மஞ்சுவிரட்டு!!

பொன்னமராவதி அருகே வார்ப்பட்டு கிராமத்தில் மகா சிவராத்திரியை முன்னிட்டு மஞ்சுவிரட்டு!!

பொன்னமராவதி, மார்ச்-10-
பொன்னமராவதி அருகே வார்ப்பட்டு கிராமத்தில் மகா சிவராத்திரியை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. மஞ்சுவிரட்டில் பார்வையாளர்கள் 18 பேர் காயமடைந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே வார்பட்டு கிராமத்தில் ஒவ்வொரு வருடமும் மகா சிவராத்திரியை முன்னிட்டு  மஞ்சுவிரட்டு நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த வருடம்  மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இந்த மஞ்சுவிரட்டில் புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கு மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.

சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டு அடைக்கினர் இந்த மஞ்சுவிரட்டில் 15 பேர் லேசான காயமும் மூன்று பேர் படுகாயமும் அடைந்தனர். அவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.