பாங்காக்கில் இருந்து பாதுகாக்கப்பட்ட விலங்குகளை கடத்த முயன்ற நபர்!!

பாங்காக்கில் இருந்து பாதுகாக்கப்பட்ட விலங்குகளை கடத்த முயன்ற நபர்!!

தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கில் இருந்து பாதுகாக்கப்பட்ட விலங்குகளை கடத்த முயன்ற மங்கோலியாவைச் சேர்ந்த நபர் ஒருவரை அதிகாரிகள் கைது செய்தனர்.

இந்த சம்பவம் பிப்ரவரி 17ஆம் தேதி அன்று நடந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதிகாரிகள் அந்த நபரை சோதனை செய்ததில் இரண்டு உடும்புகள், 6 இந்திய நட்சத்திர ஆமைகள், 8 இகுவானாக்கள், 5 மலைப் பாம்புகள், ஒரு போவா கன்ஸ்ட்ரிக்டர் மற்றும் 24 உயிருள்ள மீன்கள் கண்டுபிடிக்கப்பட்டன.அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

அந்த நபர் பாங்காக்கில் இருந்து மங்கோலியாவின் தலைநகர் ஊலான்பாத்தாருக்கு விலங்குகளை கடத்த முயன்றதாக கூறப்படுகிறது.