திமிங்கலம் தாக்கியதில் பலத்த காயமடைந்த ஆடவர்..!!!

திமிங்கலம் தாக்கியதில் பலத்த காயமடைந்த ஆடவர்..!!!

ஆஸ்திரேலியாவில் திமிங்கலம் தாக்கியதில் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார்.

இச்சம்பவம் ஆனது ஆகஸ்ட் 18 அன்று காலை 9 மணியளவில் குவின்ஸ்லாந்து மற்றும் நியூ சவுத் வேல்ஸ் மாநிலங்களுக்கு இடையேயான எல்லைக்கு அருகே நடந்துள்ளது.

திமிங்கலம் தாக்கும் போது பாதிக்கப்பட்ட நபர் படகில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

திமிங்கலத்தின் வால் அவரைத் தாக்கியதில் அவர் சுயநினைவை இழந்தார்.

இந்நிலையில் கூலங்கட்டா நகரின் கரைக்கு அருகில் இருந்த ஜெட்ஸ்கியின் சாரதிகள் அவசர சேவைகளுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

படகில் மயங்கிய நிலையில் இருந்த நபர் மீட்கப்பட்டு பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

திமிங்கலம் தாக்கியதில் அவரின் முகம் மற்றும் முதுகுத்தண்டில் பலத்த காயம் ஏற்பட்டதால் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

தற்போது அவரின் உடல்நிலை சீராக இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் படகில் செல்பவர்கள் கட்டாயம் லைப் ஜாக்கெட் அணியுமாறு போலீசார் அறிவுறுத்தினர்.

Follow us on : click here ⬇️