பூனைகளுக்கு உணவு அளிக்க வேண்டும் என்பதற்க்காக ஜாமீன் தொகையை குறைக்க கோரிய நபர்!!

பூனைகளுக்கு உணவு அளிக்க வேண்டும் என்பதற்க்காக ஜாமீன் தொகையை குறைக்க கோரிய நபர்!!

மலேசியாவில் கடந்த மாதம் 27ஆம் தேதி அன்று தனது வீட்டில் போதைப்பொருள் வைத்திருந்ததாக ஒரு நபர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

அந்த நபர் தனது பூனைகளுக்கு உணவளிக்க வேண்டும் என்பதற்காக ஜாமீன் கோரினார்.

அந்த நபர் செலுத்த வேண்டிய அசல் ஜாமீன் தொகை RM8,000 ஆகும்.

ஆனால் அந்த நபர் பூனைகளுக்கு உணவளிக்க பணம் தேவை என்று கூறியதை அடுத்து அவரது ஜாமீன் தொகை குறைக்கப்பட்டது.

அவரது குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஐந்தாண்டுகள் வரை சிறைத்தண்டனை, RM20,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

ஜூன் ஏழாம் தேதி அன்று அவருக்கு தண்டனை வழங்கப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.