மலேசியாவில் கார் கண்ணாடியை உடைத்த நபர்!!

மலேசியாவில் கார் கண்ணாடியை உடைத்த நபர்!!

மலேசியாவில் மற்றொரு நபரின் கார் கண்ணாடியை உடைத்த 40 வயதிற்குமேல் உடைய நபர் ஒருவரை காவல் துறையினர் தேடி வந்தனர். இந்த சம்பவம் பிப்ரவரி 10-ஆம் தேதி நடந்தது.

இந்நிலையில் பிப்ரவரி 12ஆம் தேதி அன்று அதிகாலை 3:30 மணியளவில் காவல்துறையினர் அந்த நபரை கைது செய்தனர்.

மேலும் அந்த நபர் வெளிநாட்டைச் சேர்ந்தவர் என்று அவர்கள் கூறினர்.

சந்தேக நபரை மூன்று நாட்கள் காவலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஒன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம் விதிக்கப்படலாம்.அல்லது இவ்விரண்டுமே விதிக்கப்படலாம்.

சாலைப் பயனாளர்கள் விடுமுறை காலங்களில் பொறுமையாகவும் கவனமாகவும் இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர்.