அடுக்குமாடி குடியிருப்பின் 8வது மாடியில் இருந்து படுக்கை உள்ளிட்ட பொருட்களை வீசிய நபர் கைது…!!

அடுக்குமாடி குடியிருப்பின் 8வது மாடியில் இருந்து படுக்கை உள்ளிட்ட பொருட்களை வீசிய நபர் கைது...!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து படுக்கையை வீசியதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் செப்டம்பர் 12 அன்று பிடோக் ரெசர்வாயர் சாலையில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பின் பிளாக் 608 இல் நிகழ்த்துள்ளது.

28 வயதுடைய நபர் ஒருவர் கட்டிடத்தின் 8வது மாடியில் இருந்து படுக்கையை வீசியதாக கூறப்படுகிறது.

அந்த நபரின் செயல்களை காட்டும் வீடியோவானது சமூக வலைதளங்களில் வெளியானது.

அந்த நபர் படுக்கையுடன் நிறுத்தாமல் மற்ற பொருட்களை வீசுவதை வீடியோவில் காணலாம்.

மேலும் அவர் வீடியோ எடுப்பவரைப் பார்த்து சிரிப்பதையும் காணலாம்.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நபரிடம் போலீஸ் விசாரணை நடைத்தி வருகிறது.