நியூஸிலாந்தில் உயிரிழந்த மலேசியா மாணவர்கள்!! அவர்களுக்கு என்ன நடந்தது?

நியூஸிலாந்தில் உயிரிழந்த மலேசியா மாணவர்கள்!! அவர்களுக்கு என்ன நடந்தது?

நியூசிலாந்தின் டெகாபோ ஏரிக்கு அருகே 5 மலேசிய மாணவர்கள் சென்ற கார் ஒன்று விபத்துக்குள்ளானது.

இந்த சம்பவம் மார்ச் 30ஆம் தேதி அன்று பிற்பகல் 1.45 மணிஅளவில் நடந்தது.

இந்த விபத்தில் இரண்டு மாணவர்கள் உயிரிழந்தனர்.

மேலும் மூன்று மாணவர்கள் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இந்த விபத்து குறித்து விசாரணைகள் நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு அந்நாட்டு பிரதமர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார்.

மேலும் அவர்களுக்கு தேவையான உதவிகளை அரசாங்கம் வழங்கும் என்று அவர் உறுதியளித்தார்.