மலேசியா விமான விபத்து : விமானம் தீப்பிடித்தது எப்படி?

மலேசியா விமான விபத்து : விமானம் தீப்பிடித்தது எப்படி?

பிப்ரவரி 13ஆம் தேதி அன்று மலேசிய மாநிலமான சிலாங்கூரில் விமானம் ஒன்று தீப்பிடித்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

முதற்கட்ட விசாரணையில் இருவரும் மலேசியாவைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து மதியம் 1:56 மணியளவில் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கிடைத்ததாக தெரிவித்தது.

விபத்துக்குள்ளான விமானம், சிங்கப்பூர் நிறுவனமான ஏவியேஷன் சேஃப்டி டெக்னாலஜியின் பயிற்சி விமானம் என்று கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்ட இருவரில் ஒருவர் பைலட் கிளப்பில் பயிற்றுவிப்பாளராக வும், மற்றொருவர் உறுப்பினராகவும் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இருவரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும் இச்சம்பவம் குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.