மலேசியா கடற்படை தலைவர் Admiral சிங்கப்பூருக்கு வருகை!

சிங்கப்பூருக்கு மலேசியா கடற்படைத் தலைவர் Admiral Abdul Rahman Ayob முதல்முறையாக அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டார்.

இருநாட்டு கடற்படைகளுக்கு இடையே வலுவான உறவை கட்டிக்காப்பதன் அவசியத்தை சிங்கப்பூரும் மலேசியாவும் மறு உறுதிப்படுத்ததி உள்ளன.

சிங்கப்பூர் தற்காப்பு அமைச்சரை மலேசியா கடற்படைத் தலைவர் சந்தித்தார்.வட்டாரப் பாதுகாப்புச் சவால்களைச் சமாளிப்பதற்கான ஒத்துழைப்பு குறித்து இருவரும் இணைந்து பேசி ஆராய்ந்தனர்.

Admiral மூன்று நாள் பயணமாக சிங்கப்பூருக்கு வந்துருக்கிறார். அதில் ஒரு பகுதியாக சாங்கி கடற்படைத் தளத்திற்கு சென்று பார்வையிட்டார்.

அங்கு உள்ள RSS Tenacious சுற்றிப் பார்த்தார். அதன்பின் மற்ற பயிற்சி வசதிகளையும் பார்வையிட்டார்.

இருநாட்டிற்கும் இடையிலான நட்பு,நீண்டக்கால இருதரப்பு தற்காப்பு உறவுகளையும் admiral வருகை வலியுறுத்துவதாக தற்காப்பு அமைச்சகம் கூறியது.