ரயிலில் பயணம் செய்யும் அஞ்சல்கள்!! சோதனை முறையில் புதிய நடைமுறை!!

ரயிலில் பயணம் செய்யும் அஞ்சல்கள்!! சோதனை முறையில் புதிய நடைமுறை!!

சிங்கப்பூரில் இனி சில அஞ்சல்கள் ரயில்களில் அனுப்பப்படவுள்ளதாக SMRT தனது முகநூல் பக்கத்தில் தகவலை வெளியிட்டுள்ளது.

SMRT இன் Stellar Lifestyle மற்றும் SingPost ஆகிய இரு நிறுவனங்களும் மூன்று மாத முன்னோட்டத்திற்காக இணைந்துள்ளன.

SingPost கொரியர் செய்பவர்கள் தெம்பனீஸ் மற்றும் ராபிள்ஸ் பிளேஸ் ரயில் நிலையங்களிலிருந்து பாயா லேபார் நிலையத்திற்கு அருகே இருக்கும் SingPost அலுவலகத்திற்கு ரயிலில் பயணம் செய்து அஞ்சலுடன் பயணிப்பார்கள்.

அந்த அலுவலகத்தில் அஞ்சல்கள் வகைப்படுத்தப்படும்.

இவ்வாறு ரயிலில் அஞ்சல்கள் அனுப்பப்படுவதால் அதற்கு ஆகும் செலவைக் குறைக்க முடியும்.

அது மட்டுமின்றி கார்பன் வெளியேற்றமும் குறையும் என நிறுவனங்கள் கருதுகின்றன.

சோதனை அடிப்படையில் ரயிலில் அஞ்சல்கள் அனுப்பப்படுவது இதுவே முதல்முறை.