கட்டுப்பாட்டை இழந்த லாரி!! ஆரம்ப பள்ளி குழந்தைகள் மீது மோதியதில் நேர்ந்த துயர சம்பவம்!! பலியான பிஞ்சுக்குழந்தைகள்!!

கட்டுப்பாட்டை இழந்த லாரி!! ஆரம்ப பள்ளி குழந்தைகள் மீது மோதியதில் நேர்ந்த துயர சம்பவம்!! பலியான பிஞ்சுக்குழந்தைகள்!!

தெற்கு ஈராக்கின் பாஸ்ரா நகரத்தில் பள்ளிக் குழந்தைகள் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது.

இந்த சம்பவம் ஏப்ரல் 2ஆம் தேதியன்று நடந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்த விபத்தில் 6 ஆரம்பப்பள்ளி மாணவர்கள் உயிரிழந்தனர்.

மேலும் 14 பேர் காயம் அடைந்தனர்.

காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

காயமடைந்த குழந்தைகளில் சிலர் ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

லாரி பிரேக்குகள் செயலிழந்ததால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து குழந்தைகள் மீது லாரி மோதியதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த விபத்து குறித்து விசாரணை நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.