Singapore news

சிங்கப்பூர் பிரதமர் இந்தியா பிரதமருக்கு கடிதம்!

இந்தியாவில் ஜூன்-2 ஆம் தேதி ஒடிசா மாநிலத்தில் ரயில் விபத்து ஏற்பட்டது. அந்த விபத்தில் 288 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

சுமார் 900 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த கோர விபத்துக்கு சிங்கப்பூர் பிரதமர் லீ தனது இரங்கலைத் கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.

இந்தியா பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.உள்ளூர் அதிகாரிகளோடு சிங்கப்பூர் தூதுரகம் தொடர்பில் இருப்பதாக கூறினார்.

இதுவரை சிங்கப்பூரர்கள் யாரும் அந்த விபத்தில் பாதிக்கப்பட்டதாக தகவல் இல்லை.