பிலிப்பைன்சில் ஏற்பட்ட நிலச்சரிவு!! 10 நாட்கள் மேல் ஆகியும் மண்ணில் புதைந்திருக்கும் அவலம்!!

பிலிப்பைன்சில் ஏற்பட்ட நிலச்சரிவு!! 10 நாட்கள் மேல் ஆகியும் மண்ணில் புதைந்திருக்கும் அவலம்!!

பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 92 ஆக உயர்ந்துள்ளது.

நிலச்சரிவு ஏற்பட்டு பத்து நாட்கள் ஆகியும் இன்னும் 36 பேரை காணவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் காணாமல் போனவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறினர்.

நிலச்சரிவு காரணமாக பல குடும்பங்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய பரிதாப நிலை ஏற்பட்டது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிப்ரவரி 6-ஆம் தேதி இந்த மோசமான நிலச்சரிவு ஏற்பட்டது.