F1 கார்பந்தய போட்டியில் சிங்கப்பூர் கோப்பையை வென்றார் லாண்டோ நோரிஸ்…!!

F1 கார்பந்தய போட்டியில் சிங்கப்பூர் கோப்பையை வென்றார் லாண்டோ நோரிஸ்...!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் நேற்று இரவு (செப்டம்பர் 22) பிரம்மாண்டமாக நடைபெற்ற சிங்கப்பூர் கிராண்ட் பிரிக்ஸ் எஃப்1 போட்டியில் மெக்லாரன் ஓட்டுநர் லாண்டோ நோரிஸ் வெற்றி பெற்றார்.

24 வயதான லென்டோ நோரிஸ் ரெட்புல்லின் மாக்ஸ் வெர்ஸ்டாப்பெனைத் வீழ்த்தி வெற்றி பெற்றார்.

இது நோரிஸின் மூன்றாவது கேரியர் கிராண்ட் பிரிக்ஸ் வெற்றியாகும்.

இவர் சாம்பியன்ஷிப் போட்டியாளரான மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் மற்றும் அணித் தோழர் ஆஸ்கார் பியாஸ்ட்ரியை விட 20 ரன்களை முந்தினார்.

நோரிஸ் இந்த சீசனின் மிகப்பெரிய வெற்றி வித்தியாசத்தை நெதர்லாந்தில் 22.946 வினாடிகளையும், இன்றிரவு நடைபெற்ற போட்டியில் இரண்டாவது பெரிய வித்தியாசத்தையும் 20.945 வினாடிகளை கடந்து சாதனை படைத்துள்ளார்.

இந்தப் போட்டியில் மாக்ஸ் வெர்ஸ்டாப்பென்  இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.

மெக்லாரன் இன் கார் ஓட்டுநர் ஓஸ்கார் பியாஸ்திரி  3வது இடம் பிடித்தார்.

 

Follow us on : click here ⬇️