Latest Singapore News in Tamil

சிங்கப்பூரில் நில சோதனைச் சாவடிகளில் அதிக நெரிசல் ஏற்படலாம்!

நில சோதனைச் சாவடிகளை கடந்த 2019-ஆம் ஆண்டு புனித வெள்ளியுடன் வந்த வார இறுதியில் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் கடந்துச் சென்றனர்.

சராசரியாக மூன்று மணி நேரம் காரில் பயணம் செய்தோர் நெரிசலில் சிக்கிக் கொண்டனர்.

அதே நிலவரம் அடுத்த வாரமும் உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனைச் சாவடிகளில் ஏற்படலாம். இவ்வாறு குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம் கூறுகிறது.

புனித வெள்ளியை ஒட்டிய நீண்ட வார இறுதியில் மலேசியா செல்லும் உட்லண்ட்ஸ், துவாஸ் நிலச் சோதனைச் சாவடிகளில் அதிக நெரிசல் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.