Latest Singapore News in Tamil

சிங்கப்பூர் தொழிலாளர் இயக்கம்!

சிங்கப்பூரில் ஊழியர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் மே தின செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

ஊழியர்கள் தொடர்ந்து மேம்பட வேண்டும் என்பதை தொழிலாளர் இயக்கம் விரும்புவதாக கூறியது.

தொழிற்சங்கங்களும்,முதலாளிகளும் மேற்கொண்ட திறன் பயிற்சி திட்டத்தில் சிங்கப்பூரர்கள் பயிற்சி பெற்றிருப்பதாக கூறியது. சுமார் 100,000 சிங்கப்பூரர்கள் அதில் பயிற்சி பெற்றுள்ளனர்.

ஊழியர்களுக்கு நல்ல சம்பளத்தையும் நல்ல வாய்ப்புகளையும் ஏற்படுத்திக் கொடுப்பதே அதன் நோக்கம்.

நேற்று மே தின செய்தியில் குறைந்த வருமானம் ஈட்டும் ஊழியர்களை ஆதரிக்க விருப்பதாக தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் கூறியது.

தற்காலிக, குத்தகை அடிப்படையில் வேலை பார்க்கும் உணவு விநியோக போன்ற ஊழியர்களின் நலனைக் காக்க வேண்டும்.

தொழிலாளர் இயக்கம் சுயத்தொழில் செய்பவர்களின் எதிர்காலத்தையும் உறுதிப்படுத்த வேண்டும் என்பதிலும், அவர்களின் ஓய்வு காலத்திலும் கவனம் செலுத்துகிறது.

நேற்றைய மே தின செய்தி அதற்கான முன்னோட்டமாக அமைந்திருக்கிறது.