குவைத் தீ விபத்து சம்பவம்!! 3 பேர் கைது!!

குவைத் தீ விபத்து சம்பவம்!! 3 பேர் கைது!!

ஜூன் 12-ஆம் தேதி குவைத்தில் வெளிநாட்டு ஊழியர்கள் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

இதில் 50 பேர் உயிரிழந்துள்ளனர்.

இச்சம்பவம் அனைவரிடமும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

பலியானவர்களில் 45 பேர் இந்தியர்கள் என்றும், அவர்களில் 7 பேர் தமிழர்கள்.

இந்தியர்களின் உடல்கள் இன்று (ஜூன் 14) காலை குவைத்திலிருந்து இந்தியா விமான படையின் சிறப்பு விமானம் மூலம் கொச்சிக்கு கொண்டு வரப்பட்டது.

மேலும் இச்சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் தீ விதிமுறைகளில் அலட்சியமாக இருந்ததே அதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

சந்தேகத்தின் அடிப்படையில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒரு குவைத் நாட்டைச் சேர்ந்தவரும் மற்றும் இரண்டு வெளிநாட்டவர்கள் ஆவர்.

பொது தீயணைப்பு படை அந்த கட்டிடத்தை ஆய்வு செய்தனர்.தரைத்தளத்தில் உள்ள காவலர் அறையில் மின்கசிவு காரணமாக தீ மூண்டதாக தெரிய வந்துள்ளது.