திரளான கிராம மக்கள் கலந்து கொண்டு கோலாகலமாக நடைபெற்ற கோட்டையூர் சிவன்கோயில் கும்பாபிஷேக விழா!!

திரளான கிராம மக்கள் கலந்து கொண்டு கோலாகலமாக நடைபெற்ற கோட்டையூர் சிவன்கோயில் கும்பாபிஷேக விழா!!

கோட்டையூர் சிவன்கோயில் கும்பாபிஷேகம்.திருமயம். பிப் 25__ திருமயம் அருகே உள்ள வி.கோட்டையூர் பிரசன்னநாயகி சமேத அகத்தீஸ்வரர் , பைரவர் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. சுந்தரம் சிவாச்சாரியார் தலைமையில் சிவாச்சாரியார் கள் வேதமந்திரங்களை கூறி யாகம் வளர்த்து பூஜைகளை நடத்தினர். பின்னர் நேற்று யாகத்தில் பூஜிக்கப்பட்ட புனித நீர்குடங்களை சிவாச்சாரியார்கள் கோயிலைச்சுற்றி வலம் வந்து கோபுரத்திற்கு கொண்டு சென்று கருட பகவான் வட்டமடிக்க கும்பத்தில் புனிதநீரை ஊற்றி அபிஷேகம் செய்தனர்.

பிறகு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மதியம் மஹா அபிஷேகமும், மாலை பஞ்சமூர்த்திகள் வீதி உலாவும் நடைபெற்றது. விழாவில் திரளான கிராம மக்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். திருமயம் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். படம் திருமயம் அருகே உள்ள கோட்டையூர் அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.