ஒரே ஒரு பலாப்பழம் வாழ்க்கையின் பல படிமங்களை சொல்லித் தருகிறது!! எப்படி?

ஒரே ஒரு பலாப்பழம் வாழ்க்கையின் பல படிமங்களை சொல்லித் தருகிறது!! எப்படி?

உறவினர் ஒருவர் ஒரு பலாப்பழம் கொண்டு வந்து தந்தார்.
-அன்பு

அதை நான் 8 துண்டுகளாக்கி 8 பேருக்கு பகிர்ந்தேன்.
-பகிர்ந்துண்ணல்

ஒரு துண்டை அருகில் உள்ள வீட்டில் கொடுத்தேன். “பலாப்பழம் வாங்கினால் உறவு முறந்து விடும்” என்று வாங்க மறுத்தார்.
-மூடநம்பிக்கை

இன்னொரு வீட்டு சகோதரி. “அண்ணே உங்க வீட்டுல பலாப்பழ வாசனை வருது எனக்கு கொஞ்சம் கொடுத்து விடுங்கண்ணே…”
-உரிமை

எதிர் வீட்டில் ஒரு அரசு உயர் அதிகாரி. “இது எந்த ஊர் பழம்”, ஆலங்குடிங்க… “சாரி நான் பண்ருட்டி பழம் மட்டும் தான் சாப்பிடுவேன்”.
-திமிர்

கீழ் வீட்டுக்கு கொடுத்தேன் ‘இறைவனுக்கு நன்றி’ என்றார்.
-இறை நம்பிக்கை.

வீட்டு பணி பெண்ணுக்கு கொடுத்தேன் “இந்த வருஷம் என் பேரப்புள்ளைங்க சாப்பிடப் போற முதல் பலாச்சுழை இது தான்” என்றாள்.
-ஏழ்மை

நண்பர் ஒருவருக்கு கொடுத்தேன். “மச்சான் அடுத்த வருஷம் எனக்கு முழு பழமா கொடுக்கணும்” என்றான்.
-நட்பு

துணைவியாருக்கு ஒரு துண்டு
-கடமை

என்னால் ஒரு சுழைகூட சாப்பிட முடியவில்லை.
– நோய்

ஒரே ஒரு பலாப்பழம் வாழ்க்கையின் பல படிமங்களை சொல்லித் தருகிறது.