Tamil Sports News Online

சிங்கப்பூருக்கு ஜொகூர் முதலமைச்சர் அதிகாரத்துவ வருகை!

பிப்ரவரி 12-ஆம் தேதி (நேற்று) ஜொகூர் மாநிலத்தின் முதலமைச்சர் Onn Hafiz Ghazi சிங்கப்பூருக்கு அதிகாரத்துவ வருகைப் புரிந்தார்.ஜொகூர் மாநில அதிகாரிகளும் வருகைப் புரிந்துள்ளனர்.

வருகைச் சந்திப்பில் சுற்றுப்புறம்,போக்குவரத்து,தொழில்நுட்பம் முதலிய பல அம்சங்களைக் குறித்து பேச்சு நடத்த உள்ளனர்.

இவைகள் சம்பந்தப்பட்ட அரசாங்க அமைப்புகளுடன் பேச்சு நடத்த உள்ளார்.

சிங்கப்பூர் அமைச்சர்களையும் சந்தித்து பேசுவார். போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன், வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், நீடித்த நிலத்தன்மை சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ ஆகியோரைச் சந்திக்கிறார்.

மின் வாகனத்துக்கு தேவையான வசதி, வெள்ள நிலைமையை சமாளிப்பது உள்ளிட்ட பல அம்சங்களைக் குறித்தும் கலந்துரையாடுவார்கள்.

சிங்கப்பூர் வர்த்தகர் சம்மேளனம், உற்பத்தி சம்மேளனம் இணைந்து ஏற்பாடு செய்யும் ஆய்வரங்கில் Onn Hafiz Ghazi கலந்துக் கொள்கிறார்.சிங்கப்பூருக்கு இரண்டு நாட்கள் அதிகாரத்துவ வருகைப் புரிகிறார்.