விவாகரத்து குறித்த தனது பதிலை மறைமுகமாக கூறிய ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி!!

விவாகரத்து குறித்த தனது பதிலை மறைமுகமாக கூறிய ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி!!

சென்னை: தமிழ் திரைப்பட நடிகர் ஜெயம் ரவியும் மனைவி ஆர்த்தியும் விவாகரத்து பெற உள்ளதாக சமீபத்தில் இணையதளத்தில் வதந்திகள் பரவின. இந்நிலையில் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி விவாகரத்து குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஜெயம் ரவி மதுரை திருமங்கலத்தில் பிறந்தவர்.
இவரின் தந்தை இயக்கத்திலும் சகோதரன் தயாரிப்பிலும் உருவான ஜெயம் படத்தில் நடித்ததன் மூலம் ஜெயம் ரவியாக அனைவராலும் அடையாளம் காணப்பட்டார். பின்னர் எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார். பின்னர் சந்தோஷ் சுப்பிரமணியம், சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும், பேராண்மை, தனி ஒருவன் உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தார். இவர் ஆர்த்தி என்பவரை காதலித்து 2009இல் திருமணம் செய்தார். தற்போது இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

ஜெயம் ரவி தற்போது காதலிக்க நேரமில்லை,பிர்தர்,ஜீனி போன்ற படங்களில் நடித்து வருகிறார். அவரது கடைசி வெளியீடு சைரன் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. பல திரையுலக பிரபலங்களின் விவாகரத்துக்கு மத்தியில் அதில் ஜெயம் ரவியும் இணைவார் என்ற வதந்திகள் பரவி வருகின்றன.

இந்நிலையில் அவரது மனைவி ஆர்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜெயம் படத்தின் டயலாக்குகளை குறிப்பிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில், காதல் என்ற சொல் வார்த்தையல்ல வாழ்க்கை என்று கூறி ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

ஜெயம் படம் வெளியாகி நேற்றுடன் (ஜூன் 20) 21 ஆண்டுகள் நிறைவடைகிறது என்பதை நினைவுபடுத்தும் வகையில் இந்த பதிவு வெளியிடப்பட்டது. இதன் மூலம் அவர்களின் விவாகரத்து குறித்த வதந்திகள் அனைத்தும் பொய் என அவரது வசனத்தை காண்பித்து நிரூபித்துள்ளார்.