சிங்கப்பூரில் இந்தியாவைச் சேர்ந்தவருக்கு சிறை தண்டனை!!

சிங்கப்பூரில் இந்தியாவைச் சேர்ந்தவருக்கு சிறை தண்டனை!!

சிங்கப்பூரில் சிமெண்ட் லாரி ஒன்று சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த சம்பவம் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நடந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்த விபத்தில் பங்களாதேஷை சேர்ந்த 40 வயதான சைக்கிள் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனை அடுத்து இந்தியாவைச் சேர்ந்த 42 வயதான லாரி ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்தனர்.

அந்த நபர் மது அருந்திவிட்டு லாரி ஓட்டியதாக விசாரணையில் தெரியவந்தது.

இதனை அடுத்து அந்த நபருக்கு ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

மேலும் அந்த நபர் 12 ஆண்டுகளுக்கு அனைத்து வகை வாகனங்களையும் ஓட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.